பயண அனுபவங்கள் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியான தித்திப்பான பல விஷயங்களை உள்ளடக்கியதாகும். நான் முதலில் என் அனுபங்களாக எழுதப்போவது என் பயண அனுபங்களைக் குறித்தாகும்.
தற்பொது தான் சொல்லிக்கொள்ளும் படியான ஓர் வேலையில் செட்டில் ஆகி உள்ளேன்! வேலை தேடி அலைந்த நாள் முதல் வலையுலகோடு நல்ல தொடர்பில் இருந்தாலும், வேலை கிடைத்த பின்னரே தமிழ் வலையுலகின் பக்கம் கவனம் வைக்க முடிந்தது.
அதிகமாக வேலைக்காக மட்டுமே வலையில் இருந்ததால் தமிழ் வலையுலகின் பக்கம் வரவே முடியாமல் போனது.
வேலைக்கு அமர்ந்த முதல் ஒருவருட காலம் வரைக்கும் அலுவலகத்தில் இணைய வசதி எனக்கு செய்துத் தரப்படாததால் பிரௌஸிங் செண்டர்களே என் அடைக்கலமாக இருந்தது.
தற்போது தான் அலுவலகத்தில் இணைய அனுமதி கிடைத்தது. இணையத்தில் தமிழை பார்த்த நாள் முதல் எனக்கும் தமிழில் ஏதாவது நெட்டில் எழுதி வரவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. அதுவும் தேன்கூடு, தமிழ்மணம் போன்ற தளங்களை பார்த்தபின் அந்த ஆவல் அதிகமாகவே இருந்தது.
நேற்று தான் முறையான அனுமதி எனக்கு கிடைத்தது. இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இத்தளம் வழியாக என் அனுபவங்களை இங்கு பங்கு வைக்க விழைவேன்.
என் முதல் பயண அனுபவத்தைக் குறித்து அடுத்த பதிவு.
Friday, June 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment